Sunday, July 14, 2019

ஜாம்பழம்

என் மகளின் கையில் இருக்கும் இப்பழத்தினை ஈழத்தில் ஜாம்பழம் (jam fruit) என்போம். இங்கே தேன்பழம், சீனிப்பழம், நெய்ப்பழம் என்ற பெயர்களில் அழைக்கிறார்கள். அற்புதமான இனிப்புச் சுவையுடையது. மரம் நல்லா சடைத்து நிழல் தரும் வகையானது.

ஈழத்தில் நான் படித்த கொன்வேன்ற் (அச்சுவேலி-பலாலி போகும் சாலையில்) பள்ளியில் முதன்முதலில் இம்மரத்தினை பார்த்திருக்கிறேன். பழம் பறித்து தின்றது மீண்டும் நினைவிலாடுகிறது.

இப்போது குடியிருக்கும் வீட்டைச் சுற்றி ஐந்து மரம் நிற்கிறது. பழமோ பழுத்து விழுகிறது. பறவைகள் அதிகமாக வந்து சந்தோசத்தை அள்ளித் தருகிறது. பக்கத்து வீட்டுப் பாட்டி சொன்னாங்க சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து என்று.

அடர்த்தியாக பற்றைபோல மண்டிக் கிடந்த இந்த மரங்களை சில மாதங்களுக்கு முன்பு தறிக்க வேண்டும் என குடியிருக்கும் வீட்டின் ஓனர் அம்மா சொன்னபோது தடுத்துவிட்டு சில கிளைகளை மட்டும் வெட்டி சரிசெய்ததின் பலனை இந்தக் கோடையில் உணர்ந்து கொண்டனர்.

பறவைகளின் உன்னத சப்தங்களோடு காலை விடியல் அற்புதமான கவிதை.

- சுகன்யா ஞானசூரி
14/07/2019.

No comments:

Post a Comment