Tuesday, March 23, 2021

ஐ.நா மன்றமும் தமிழர் நிலையும்



 ஐ.நா மன்றமும் தமிழர் நிலையும்

***********************************

ஐ.நா வில் இந்தியா ஒருபோதும் தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களிக்காது. அது காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும் சரி பா.ஜ.க ஆட்சி நடந்தாலும் சரி. ஒருவேளை இந்தியா நடுநிலையோடு வாக்களிக்காமல் இருந்தாலும் அது இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவே இருக்கும். தமிழர்களுக்கு எந்த அனுகூலமும் கிடைக்கப்போவதில்லை. தனிநாடு, அரசமைப்பு எந்த ஒன்றும் இல்லாத தமிழர்களை ஆதரித்து என்ன பயன் என்பதே பெரும்பாலான அரசுகளின் எண்ணமாக இருக்கிறது. குறைந்தபட்சம் நாடுகடந்த தமிழர்கள் ஒரு வலிமையான அரச கட்டமைப்பை (புலி ஆதரவு எதிர்ப்பு என்பதற்கு அப்பால் சிவில் சமூகங்களின் நலன் சார்ந்து) உருவாக்கத் தவறிவிட்டார்கள். எல்லாம் அதிகாரப் பசி. சுகபோக வாழ்வின் மோகம். இப்படியாக நாம் வலிமையற்று இருந்துகொண்டு இந்தியா ஆதரவு தந்தால் தமிழர்களுக்கு தனி நாடு கிடைத்துவிடும் என்ற எண்ணம் சுத்த அபத்தம். ஒருபோதும் ஒரு குற்றவாளி இன்னொரு குற்றவாளியை காட்டிக்குடுக்கமாட்டான். இதுதான் அரசுகளின் இராஜதந்திரம். இப்போதைக்கு குறைந்தபட்சம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைகள் என்ன? அவர்கள் உயிரோடு உள்ளார்களா? கொல்லப்பட்டு விட்டார்களா? என்பதையாவது தெரிவிக்க வேண்டி மனச்சாட்சியற்ற மனிதவுரிமைகள் ஆணையம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக நாடுகளின் ஆதரவை அது கோரத்தேவையில்லை. மனிதவுரிமைகள் தொடர்பாக நிகழும் வாக்கெடுப்பு என்பது இலங்கையிடமிருந்து தங்களுக்கான ஆதாயங்களுக்காக நடாத்தப்படுகின்ற குதிரைபேரங்கள் அன்றி வேறொன்றும் இல்லை. 

- சுகன்யா ஞானசூரி

23/03/2021.