Saturday, September 19, 2020

தற்சார்பு வாழ்க்கையின் முதல்நிலை



 "#தற்சார்பு" வாழ்க்கையின் முதல்நிலை. இன்றைய தினத்தின் உணவுத் தேவையை பூர்த்தி செய்திருக்கிறது எதேச்சையாக ஊன்றிவைத்த விதை. 


தம்பி அடுத்து என்ன அரசியலில்தானே என உங்கள் மைன்ட் வாய்ஸ் கேட்குது. நமக்கு சோறுதான் முக்கியம்.


 #அகதி அரசியல் பேசுதல் வேண்டும்.


- சுகன்யா ஞானசூரி

19/09/2020.





வெள்ளி விழா ஆண்டில்


 வெள்ளி விழா ஆண்டில் 

*********


18.09.1996 மாலை 6.30 மணிக்கு வலைப்பாடு கடற்பகுதியில் இருந்து புறப்பட்டு 19.09.1996 காலை 8 மணிக்கு தனுஷ்கோடி கரையில் இறங்கிய எமக்கு "அகதி" என முத்திரை குத்தப்பட்டு இன்று 25வது ஆண்டில். சாதனையா? வேதனையா? என பட்டிமன்றம் மட்டும் வைக்கவில்லை. இன்னும் எத்தனை காலத்துக்கு நாம் இப்படியே வாழ? இந்திய தேசத்திடம் நாம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இங்கு எமக்கு குடியுரிமை தருக. இயலவில்லை எனில் வேறு தேசங்களுக்கு அனுப்புக. 


அந்த அலைகள் ஏன் 

இந்தப் பக்கமாய் 

எம்மை ஒதுக்கின?


- சுகன்யா ஞானசூரி

19/09/2020.

Sunday, September 6, 2020

தொட்டால் சிணுங்கி




 #தொட்டால்_சிணுங்கி 

வழக்கமாக பயன்படுத்துகின்ற வழி கொரோனாவினால் அடைபட்டிருந்ததால் மாற்றுவழியில் இன்று வருகையில் கண்டுகொண்டேன். சிறுபிராயத்து உணர்வுகள் மேலெழுந்து நர்த்தனமாடத் துவங்கியது. உடனே மகளை அழைத்துவந்து மகளோடு நானும் தொட்டுத் தொட்டு மகிழ்ந்தோம். முதலில் தொட்டதும் சுருங்கியதைக் கண்டு பயந்த மகளோ அந்தச் செடியை வீட்டுக்கு எடுத்துப் போகலாம் எனும் அளவுக்கு வசியமாகிவிட்டார். மன அழுத்தத்தை போக்கி வசியம் செய்யும் மாயக்காரச் செடி என்பது சாலப் பொருத்தம்தான். கான்கிரீட் காடுகளாகிப் போன மாநகரத்தில் இவைகள் காணக்கிடைப்பதே அரிதினும் அரிதான ஒன்று. தரையோடு படரும் மமோசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இச்செடியை மலையாளத்தில் #தொட்டாவாடி என்று அழைப்பார்களாம். #இந்தியில்_எனக்குத்_தெரியாது. 

- சுகன்யா ஞானசூரி

06/09/2020.