Friday, January 1, 2021

கலை மெய்மை அரசியல்


 கிழக்கு லண்டனில் பிறந்த நாடக மேதை. பிரித்தானிய அரசையும், ஐக்கிய அமெரிக்கா அரசையும் விமர்சிக்கும் நெஞ்சுரமிக்க எழுத்தாளர். மானுடத்தின் மீதான பற்றுதலும், வல்லரசுகளின் ஏகாதிபத்தியத்தினால் சிதைக்கப்படும் மக்களின்பால் குரல் கொடுக்கும் கவிஞனுமாக நோபல் பரிசு பெற்றவரும ஹெரால்ட் பின்ட்டரின் கலை மெய்மை அரசியல் எனும் சிறு நூல் தோழர் யமுனா ராஜேந்திரன் அவர்களின் மொழியாக்கத்தில் வாசிக்கக் கிடைத்தது. என்.சி.பி.எச் சிறுநூல் வரிசை வெளியீடு. 


அரசியல் செயல்பாடுகளில் கலையின் பங்களிப்பு எத்தகையது? அதன் வகிபாகம் என்ன? ஒரு கலைச் செயல்பாட்டாளன் அரசியல் களச்செயல்பாட்டுக்குள் பங்காற்றுதல் என விரிந்து குர்து, நிகரகுவா, ஈராக் என பல பலிக்களங்களை எடுத்துக்காட்டுகளாக விவரித்து பின்ட்டர் ஆற்றுகின்ற உரையில் எப்படியெல்லாம் பொய்களை மெய்களாக்கி வல்லரசுகள் தங்களின் ஆக்டோபஸ் கரங்களை (இராணுவ கேந்திரங்களை) விரிக்கின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறார். ஒருவேளை அவர் இன்னும் சிலகாலம் உயிரோடு இருந்திருந்தால் ஈழத்தில் நிகழ்ந்த யுத்தப் படுகொலைகளையும் சுட்டியிருப்பார். 


மரணம் எனும் அவரது கவிதை கைவிடப்பட்ட ஒரு சடலத்தின் மீதான ஒரு விசாரணையைக் கோருவது போன்ற விவரணைகள் ஒரு புலன்விசாரணை. உண்மையிலேயே தமிழில் இப்படியான எழுத்தாளன், கவிஞன், செயல்பாட்டாளன் இருந்தால் தவறான முத்திரை குத்துதல், காயடிப்ச் செய்தல் என நிகழ்ந்துவிடும் அபாயம் உள்ளது. அதை இங்கே தேர்வு செய்யவும் விரும்புவதில்லை. 

* எழுத்தாளனுடைய வாழ்க்கை என்பது அதி பலவீனமானது. அநேகமாக அம்மணமான நடவடிக்கை. அதற்காக நாம் அழுது கொண்டிருக்கத் தேவையில்லை.

* நாம் காண்பதெல்லாம் என்றும் முடிவுறாத பிரதிபலிப்புகள்தான். 

ஆம் பின்ட்டரிஸ் எனும் கோட்பாட்டை புதிதாக உருவாக்கியவரின் இந்த வார்த்தைகள் எத்தகைய நிதர்சனமானவை. 

- சுகன்யா ஞானசூரி

01/01/2021.

2 comments:

  1. நல்லதொரு நூல் அறிமுகம்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவில் மகிழ்கிறேன். மிக்க நன்றிங்க தோழர்

      Delete