Friday, January 1, 2021

தோழர் பொதியவெற்பனின் அரை நூற்றாண்டுப் பயணம்

 


இன்று திருச்சி என்.சி.பி.எச் சென்றிருந்தபோது நான்கு சிறுநூல்கள் வாங்கிவந்தேன். அதில் முதல் நூலாக தோழர் பொதியவெற்பன் எனும் பெரும் ஆளுமையை இச்சிறுநூல் வழி இன்று கொஞ்சம் அறிந்துகொண்டேன். இதுவரை நேரில் பார்த்ததில்லை. முகநூலில் அவரது பதிவுகளை தொடர்ந்து வாசித்து வந்த எனக்கு இது ஒரு சிறு நூல் எனினும் வீ.அரசு அவர்களின் உழைப்பு பல்வேறு தளங்களில் தோழர் பொதியவெற்பன் அவர்களை அணுகியிருக்கும் விதம் பின்வரும் தலைமுறை எடுத்தாள ஒரு துவக்கப்புள்ளியை இட்டுச் செல்கிறது. கனமான புத்தகங்களை வாசிப்பதைக் காட்டிலும் கனமான விடையமுள்ள இச்சிறு நூல்கள் எனக்கு வாசிப்பதற்கு ஏற்றதாக இருப்பதாக (ரொம்பச் சோம்பேறி ஆகிவிட்டேன்) உணர்கிறேன். வாய்ப்புள்ளோர் வாசித்துப் பாருங்கள். தோழர் பொதியவெற்பன் பொதிகைச் சித்தராக வந்து நிற்கும் இடத்தை அறிந்துகொள்ளலாம். அவரை நாம் எந்த ஒன்றிற்குள்ளும் அடைத்துவிட முடியாத தமிழின் மிகப்பெரும் ஆளுமையே.

- சுகன்யா ஞானசூரி

24/12/2020.

No comments:

Post a Comment