Friday, March 11, 2016

ஒரு மழை வந்து போகவேண்டும்- பா.செல்வகுமார்

                        சில கவிதைகளை வாசிக்கும்போது குழந்தைப் பருவத்தின் நினைவுகளைக் கூட்டிவரும், பால்யத்தின் நினைவுகளில் பரவசம் கொள்ளும், காதல் நினைவுகளை கிழர்த்திவரும், ஊரின் நினைவுகளோடு உறவாடும். அந்த மண்ணின் மனத்தினை, மொழியினை பறைசாற்றும். இங்கு தோழர் "பா.செல்வகுமார்" அவர்களின் "ஒரு மழை வந்து போகவேண்டும்" கவிதைத் தொகுப்பை வாசித்து முடித்ததும் அத்தனை நினைவுகளோடும் சாதியின் பெயரால் நிகழ்த்தப்பட்ட அந்த கொடுமைகளின் வலிகளையும் அழைத்து வந்தது. வேறென்னத்தை நான் சொல்லிவிட?

                      கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அதுபோல்தான் கவிஞரின் சிறு கவிதைகள் கவனம் கொள்கின்றன. சிறுகதை வடிவிலான கவிதையிலும் பொருள் இருக்கிறது. ஓட்டோகிராப் சினிமா பாணியிலான சில கவிதைகள் ஞாபகங்களை உண்டுபண்ணுவதையும் தவிர்க்கவியலவில்லை. இத்தோடு நின்றுவிடாமல் கவிதையின் அடுத்த கட்டத்தை அவர் கைக்கொள்ள வேண்டும். கவிதைகளை நான் குறிப்பிடுவதைக் காட்டிலும் வாங்கி வாசித்துப் பாருங்கள்.

                       மீண்டும் "ஒரு மழை வந்து போகவேண்டும்" சாதியத்தை துடைத்தழித்துப் போக. வாழ்த்துக்கள் தோழரே.
- சுகன்யா ஞானசூரி,

No comments:

Post a Comment