Wednesday, January 6, 2016

பிரமிள் 19 வது நினைவுநாள்.....

இன்றைய தினம் படிமக் கவி பிரமிள் நினைவு நாள்(சனவரி-06-1997)....
ஈழத்தில் பிறந்து தமிழகத்தில் தன் விமர்சனத்தாலும், படிமக் கவிதைகளாலும் சிறந்து விளங்கியவர். நேர்கொண்ட பேச்சும், எதற்கும் வளைந்து கொடுக்காத மனத் திடமும் பிரமிளுக்கே உரித்தானது. தமிழ்ப் படைப்புலகம் இப்படியான படைப்பாளிகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தது துரதிஷ்டமே. ஆனால் இன்றைய இளைய தலைமுறை உண்மைகளைத் தேடிக் கண்டறிந்து கொண்டாடுவது மகிழ்ச்சியான விசயம். அந்தவகையில் பிரமிளை மீட்டுருவாக்கம் கொள்ளவைத்தவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்.... அத்தகைய அற்புதமான படைப்பாளிக்கு இன்றைய நாளில் என் நினைவஞ்சலிகளைச் செலுத்துகின்றேன்....
- சுகன்யா ஞானசூரி,
06/01/2016.

No comments:

Post a Comment