Tuesday, November 10, 2020

செம்மொழித்தமிழ்


 

செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள்

தொல்காப்பியம் முதல் இறையனார் அகப்பொருள் வரையிலான 41 நூல்களின் தொகுப்பு. நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்த சங்க இலக்கிய நூல்களில் விளக்கவுரையுடனான சில பழைய நூல்களை சமீபத்தில் வாங்கியிருந்தாலும் மொத்தமாக ஒரே புத்தகமாக கிடைத்ததில் அளவில்லாத மகிழ்ச்சி. விளக்கவுரை இல்லை என்பது சிறு குறையாக இருப்பினும் பதம் பிரித்து பதிப்பித்திருப்பது எளிதாக விளங்கிக்கொள்ள முடிகிறது. நேரில் சென்று வாங்க எண்ணியிருந்தேன். ஆனாலும் சூழல் அமையவில்லை. கடைசி நாளில் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி அழைத்தால் அழைப்பை எடுக்காதது சற்று பதற்றமாக (பணத்திற்காக அல்ல நூல் கிடைக்குமோ கிடைக்காதோ என்றே) இருந்தது. ஆனால் நூல் கைக்கு வந்ததும்தான் மனம் நிறைவானது. குறைந்த விலையில் நிறைவான தமிழ் நூல் என்றால் மிகையில்லை. பதிப்பித்து பத்தாண்டுகள் கழித்து கவனம் குவிக்கப்பட்டிருக்கிறது என்பதும் தமிழ் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்பதற்கு சான்று பகர்கிறது.

- சுகன்யா ஞானசூரி

No comments:

Post a Comment