Sunday, September 6, 2020

தொட்டால் சிணுங்கி




 #தொட்டால்_சிணுங்கி 

வழக்கமாக பயன்படுத்துகின்ற வழி கொரோனாவினால் அடைபட்டிருந்ததால் மாற்றுவழியில் இன்று வருகையில் கண்டுகொண்டேன். சிறுபிராயத்து உணர்வுகள் மேலெழுந்து நர்த்தனமாடத் துவங்கியது. உடனே மகளை அழைத்துவந்து மகளோடு நானும் தொட்டுத் தொட்டு மகிழ்ந்தோம். முதலில் தொட்டதும் சுருங்கியதைக் கண்டு பயந்த மகளோ அந்தச் செடியை வீட்டுக்கு எடுத்துப் போகலாம் எனும் அளவுக்கு வசியமாகிவிட்டார். மன அழுத்தத்தை போக்கி வசியம் செய்யும் மாயக்காரச் செடி என்பது சாலப் பொருத்தம்தான். கான்கிரீட் காடுகளாகிப் போன மாநகரத்தில் இவைகள் காணக்கிடைப்பதே அரிதினும் அரிதான ஒன்று. தரையோடு படரும் மமோசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இச்செடியை மலையாளத்தில் #தொட்டாவாடி என்று அழைப்பார்களாம். #இந்தியில்_எனக்குத்_தெரியாது. 

- சுகன்யா ஞானசூரி

06/09/2020.




2 comments:

  1. சிறப்பான பதிவு
    பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றிகளும் தங்கள் வருகைக்கு.

      Delete