Monday, January 20, 2020

சிறீலங்காவின் தேசியத் தற்கொலை - பிரமிள்

இதுவொரு தாமதமான வாசிப்புதான். ஆனால் பிரமிளை கவிஞனாக, கறாரான விமர்சகனாக அறிந்திருந்த எனக்கு இந்த நூலை வாசித்த பிறகு சிறந்த சமூக நோக்குள்ள படைப்பாளனாகவும், கட்டுரையாளனாகவும் எனக்குள் அறிமுகமாகியுள்ளார். தமிழ்த்தேசியம், திராவிடம், மார்க்சியம் போன்ற பார்வைகளிலிருந்து இலங்கையின் தமிழ்-சிங்கள இனமுறுகல் எவ்வாறு பெரும் பகையாக மாறியது, அவற்றிற்கு காரணியானவர்கள் யார்? அதில் குளிர்காய்ந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என 1984 வரையான காலகட்டம் வரை சட்டகப்படுத்தியிருக்கிறார்.

இலங்கையின் பூர்வகுடிகள் யார் என்பதில் துவங்கி வரலாற்று ரீதியாக நிறுவுவதும், இலங்கைத் தமிழர்-மலையகத் தமிழர்-சிங்களவர் வாக்குவங்கிகள், இவர்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகள் தோற்றுவிக்கப்பட்டதன் காரண காரியங்களும், விஜயனின் வருகையில் ஆரம்பித்து ஈழ ஆயுதப் போராளிகள் உருவாகிய காலங்களுக்கிடையிலான காலகட்டத்தை சிறிய நூலுக்குள் இரத்தினச் சுருக்கமாக சொல்லியிருக்கிறார்.

1984 க்கு பிறகு நூல் விரிவாக்கம் கண்டதா தெரியவில்லை. ஆனால் முள்ளிவாய்க்கால் வரைமட்டுமல்லாது இன்றும் புத்த பிட்சுகளுக்கு அச்சப்பட்டே சிங்கள ஆட்சியாளர்கள் தமிழின விரோதப் போக்கை கைக்கொள்கின்றனர்.

மதம் மக்களுக்கான அரசியலை சீரழிக்கும் ஒரு லாகிரி.

- சுகன்யா ஞானசூரி
20/01/2020

No comments:

Post a Comment