Wednesday, November 8, 2017

முத்தன் பள்ளம்

எத்தகைய பெரிய ஆண்ட சமூகமாக இருந்தாலும் இன்றைய நிலையில் அவர்களின் இருப்பை சமூக பொருளாதார அரசியலே தீர்மா னிக்கிறது.

ஒரு நவீன விளையாட்டின் மூலமாக அறியப்படாத ஓர் இருப்பிடத்தை தேடி செல்வதும், அதைக் கண்டடைந்த பின்னால் மனம் கனத்துப் போவதுமாக நாவல் முற்றுப் பெறுகிறது.முத்தன் பள்ளம் வாசித்து முடிக்கையில் மனதுக்குள் பெரும் பள்ளம் விழுவதையும் அங்கே கண்ணீர் தேங்குவதையும் உணர முடியும்.

புதுக்கோட்டை சமஸ்தானத்தை தொட்டு, முத்தரையர் சமூகத்தின் வாழ்வியலையும், அதில் ஒரு பிரிவார் (பாட்டன் வழித்தோன்றல்கள்) இந்த நவீன யுகத்தில் படும் அவஸ்தை என போக்கிமான் பூச்சியின் பயணத்தில் கதையை உருவாக்கியதில் புதிய கதை சொல்லல் முறை புலப்படுகிறது. ஓரிடம் தவிர்த்து மற்ற இடங்களில் வரலாற்றுச் சம்பவங்களை விழிக்கும் பொருட்டு அந்த காலத்தினை (ஆண்டுகளை) துல்லியமாக அல்லது தோராயமாக பதிவு செய்தல் அவசியமான ஒன்றாகும். இது புதுகை வரலாறு அறிந்தவர்கள் எளிதாக புரிந்துகொள்வர். புதிய வாசிப்பாளர்களுக்கும் அறியாதவர்களுக்கும் குழப்பமான வாசிப்பில் அயர்ச்சியை உருவாக்கும்.

முத்தனுக்கும் முத்தாயிக்குமான உறவு என்பது சடுதியில் தொடங்குவதும், முன் பின் அறிமுகம் இல்லாத முத்தனோடு ஒரு இரவில் கலவியில் ஈடுபடுதல் போன்ற காட்சிகள் சினிமாத்தனமான இருப்பது நெருடுகிறது. இன்னும் இந்த பகுதியில் கவனம் செலுத்தியிருந்தால் புனைவு வீரியம் பெற்றிருக்கும்.

மார்த்தாண்ட பைரவ தொண்டைமானின் காதலும், வெளிநாட்டுக் காதலியை இழக்க விரும்பாமல் பட்டம் பதவிகளை துறத்தலும், காங்கிரசாரைப் பார்த்து மன்னன் சொல்லும் அந்த வரிகள் சிறப்பு.

கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் முத்தன் பள்ளம் ஒரு சமூகத்தின் ஆவணமாக இல்லாமல் ஒரு வரலாற்று ஆவணமாக இருந்திருக்கும் என்பது எனது பார்வை. அரசின் கவனத்திற்கு முத்தன் பள்ளத்தின் அவலத்தை நகர்த்தி விடிவை ஏற்படுத்த வேண்டியது நமது கடமை. அதற்கான முதல்படியை தன் வரலாற்றுப் புதினத்தின் வாயிலாக எடுத்து வைத்திருக்கும் தோழர் அண்டனூர் சுராவுக்கு வாழ்த்துக்கள்.


ஆசிரியர் : அண்டனூர் சுரா

பதிப்பகம் : மேன்மை

விலை : ₹150

4 comments:

  1. மிக நுட்பமான விமர்சனம்...வாழ்த்துகள் சூரி

    ReplyDelete
  2. அருமையான விமர்சனம்
    நன்றி நண்பரே

    ReplyDelete